Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Tuesday, July 21, 2009

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம்


இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நாளை (22-07-2009) புதன்கிழமை ஏற்படப்போகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படுகின்றன. இதனால் பூமியின் சில பகுதிகளில் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் நிழல் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது.

நாளை (22-07-2009) புதன்கிழமை சூரிய உதயத்துடன் ஏற்படும் இந்தக் கிரகணம் 5 மணி 14 நிமிடங்களுக்கு நீடிக்கப்போகிறது. இதுவே இந்த 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய சூரிய கிரகணமாக இருக்கும்.

அதிகாலை 05.28 நிமிடத்திற்குத் துவங்கும் இந்தக் கிரகணம், காலை 10 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாளைக் காலை நிகழவிருக்கும் இச் சூரியகிரகணத்தை இலங்கையிலும் மலேசியாவிலும் காணக்கூடியதாக இருக்கும்.

இலங்கையில் அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் இச் சூரியகிரகணத்தை 7.34 மணி வரை காணக்கூடியதாக இருக்கும். எனினும் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்த்தால் கண் விழித்திரை பாதிப்படையும்.

சீனாவில் 6 நிமிடம் சூரிய கிரகணம் இருக்கும். கடைசியாக, 1999 ம் ஆண்டு முழு சூரிய கிரகணம் தெரிந்தது. ஜுலை 22 ம் திகதி கிரகணம் தான், இந்த தலைமுறையினர் பார்க்கும் கடைசி நீண்ட முழு சூரிய கிரகணம். இதன் பின்னர் 2034 இல் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால், இது போன்ற நீண்ட முழு சூரிய கிரகணம் இன்னும் 123 ஆண்டுகளுக்குப் பின் 2132 இல் தான் நிகழும்.

சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்த்தால், சூரிய ஒளி விழித்திரையில் குவிந்து புண்ணாக்கிவிடும். இதனால் பார்வை பறிபோகும். முழு சூரிய கிரகணத்தின் போது திடீரென்று இருள் கவ்வும். அப்போது சூரியனை நாம் பார்க்கும் போது நமது பார்வை 3 மடங்கு பெரிதாகி இருளை பார்க்கும். இதனால் கண்ணுக்குள் சூரிய ஒளி 10 மடங்கு அதிகம் பாய வழிவகுக்கும். இச் சூழலில் முழு சூரிய கிரகணம் முடிந்து திடீரென்று ஒளி வெளி வருவதை கண்கள் பார்க்க நேரிட்டால், மேலும் 10 மடங்கு சூரிய ஒளி கண்ணுக்குள் திடீரென்று பாய்ந்து கண் பார்வையை பாதித்துவிடும். எனவே, சூரியனை வெறும் கண்ணால் நேரடியாக பார்க்க கூடாது.

தண்ணீரில் பிரதிபலிக்கும் சூரியனையும் பார்க்க கூடாது. டெலஸ்கோப், பைனாகுலர், எக்ஸ்ரே பிலிம் மூலமும் பார்க்கக் கூடாது. மைலார் கண்ணாடி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.

Monday, July 20, 2009

க‌ணி‌னி‌யி‌ல இருந்து கண்களை பாதுகாக்க

sellrajesh-eye.jpg
க‌ணி‌னி‌யி‌லநீண்ட நேரம் வேலை செய்பவர்களு‌க்கக‌ண்க‌ளஉல‌ர்‌ந்தப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளஏ‌ற்ப‌ட்டு ‌விடு‌கிறது.

அதாவது, க‌‌ணி‌னி‌யி‌லவேலசெ‌ய்யு‌ம்போதக‌ணஇமைக‌ளஇமை‌ப்பதகுறை‌ந்து ‌விடு‌கிறது. இதனா‌லக‌ணவர‌ண்டபோ‌கிறது. இதனை‌தத‌வி‌ர்‌க்ஒரமணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையின் அடிப்பாகத்தால் லேசாக அழுத்தி விட வேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை.

2 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு ஒரு முறை க‌ண்களை சுழல ‌விட வே‌ண்டு‌ம். அ‌வ்வ‌ப்போது க‌ண் இமை‌க்க‌ப்படு‌கி‌ன்றதா எ‌ன்பதை உறு‌தி செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

அ‌திக நேர‌ம் க‌ணி‌னி‌யி‌ல் வேலை செ‌ய்ய வே‌ண்டி வ‌ந்தா‌ல் அ‌வ்வ‌ப்போது எழு‌ந்து ப‌ச்சையான மர‌ங்களை‌ப் பா‌ர்‌த்து‌வி‌ட்டு வ‌ந்து அம‌ர்‌ந்து ப‌ணியா‌ற்றலா‌ம்.

Thursday, May 28, 2009

முழிச்சுக்கோ தேநீர் குடிச்சுக்கோ இதய நோயகுறைச்சுக்கோ ...


தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோயைத் தவிர்க்கலாம்

தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:

தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.

தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.

ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன்.

இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.


நன்றி :wordpress

Saturday, May 16, 2009

Kannathil Muthamittal - Vidai Kodu Engal

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Prem Gopal's performance on Eelam Tamils - Part 2(Vijay TV)

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Prem Gopal's performance on Eelam Tamils - Part 1(Vijay TV)

ஒவ்வொரு தமிழனுன் பார்க்க வேண்டியவை

Wednesday, May 13, 2009

Cow Fight