Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger

Thursday, July 7, 2011

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்


இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் 07.07.1859இல் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி ஓடியது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியது. அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

இரட்டைமலை சீனிவாசன் 1939இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும்அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கோயம்புத்தூரில் இவர் கல்வி பயின்ற பள்ளியில் சுமார் 400 மாணவர்களில் 10 மாணவர்கள் தவிர மற்ற அனைவருமே பார்பபன மாணவர்கள் எனத் தன் வாழ்க்கைச் சுருக்கத்தில் அவரே எழுதியுள்ளார். வறுமை காரணமாக பள்ளிக் கல்வியோடு இவர் படிப்பை முடித்துக் கொண்டார். தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார் 1887ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் கம்பெனியில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890இல் சென்னைக்கு வந்தார்.

1891இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை பறையன் என்ற திங்கள் இதழை நடத்தினார்.

இதே காலகட்டத்தில்தான் 1.12.1891இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892இல் அதை ஆதித் திராவிட மகானசபை எனப் பெயர் மாற்றி பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு காந்தியடிகளுடன் பழக்கமேற்பட்டு காந்திக்குத் தமிழையும், திருக்குறளையும் கற்றுக் கொடுத்தார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

இவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917இல் ஆதித் திராவிட மகாசபை எம்.சி.இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் தாழ்த்தப்பட்டோரில் இருந்து 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1936வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன.)

இரட்டைமலை சீனிவாசன் 1921இல்தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார். அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலின் போது 19.11.1923இல் இரட்டைமலை சீனிவாசன் எல்.சி.குருசாமி உள்ளிட்ட 10பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசாயின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

1920 முதல் 1936 வரை தாழ்த்தப்பட்டோர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லாநிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

22.08.1924இல் சட்டசபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 கெசட்டில் (பழழெ) வெளியிடப்பட்டது.

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்ளாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமா அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம் மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர் (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 19, பக்கம் 822-830)


இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922இல் எம்.சி.இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாயை எண் 817, 25.03.1922இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி 20 பக்கம் 280)

உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி.குருசாமியும் முன் வைத்தார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-20 பகுதி-2 பக்கம்-896)


இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
(சட்டசபை விவாதக் குறிப்புகள் தொகுதி-22 பகுதி-1 பக்கம்-351)

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதித் திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன் அவர்களைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி.வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி.ஐ.முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்.சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும்.


இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (குறிப்பு ் 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது.
ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்துவார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுவார். எம்.சி.மதுரை பிள்ளை, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசுவார்கள்.

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. (சட்டசபை விவாதக் குறிப்புகள், தொகுதி 50, பக்கம் 391 – 392)

1930–32களில் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இவர், அண்ணல் அம்பேத்கருடன் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் இவருக்கு இருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அண்ணல் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 18,19)

இதே கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். (வட்டமேசை மாநாடு கூட்ட நடவடிக்கைக் குறிப்பு, தொகுதி 3, பக்கம் 168,174)
இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

டாக்டர் சுப்பராயன் 1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார்.

இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19பேர் நடுநிலையாகவும் இருந்தனர். எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளிக்காததால் இதைச் சட்டமாக்க முடியாமல் போய்விட்டது.

இரட்டைமலை சீனிவாசனை அவர்களை வட்டமேசை மாநாட்டிற்கு அழைத்துச் சென்று தம்மைப் புறக்கணித்து விட்டாரே என்ற கோபத்தில் எம்.சி.இராசா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் சேர்ந்து கொண்டும்காந்திக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார்.

அண்ணல் அம்பேதகர் அவர்கள் 1935இல் மதமாற்றம் பற்றி அறிவித்தபோதும் கூட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கருடைய மனம் நோகாமல் மெதுவாக ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவந்த தலைவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று மறைவுற்றார்.

தனது இனத்தின் உரிமைளை பெற இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சமூக போராட்டங்கள் கொடுமையாக இருந்தது. தாழ்த்தப்பட்டவன் தெருவில் நடப்பதற்கு போராட்டம் பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்கப் போராட்டம் கல்வி கற்க பள்ளிகளுக்குள் அனுமதிகோரி போராட்டம் என அடிப்படை உரிமைகளுக்காக இனபோராளியாய் வாழ்ந்த இரட்டைமலை சீனிவாசனை இன்று சந்ததியினர், "தாத்தா இரட்டைமலை சீனிவாசன்" என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

இன்று தாத்தாவின் பிறந்ததினம்.


நம் முன்னோடிகள் பெற்றுத்தந்த உரிமைகளை நினைவு கூறுவோம். இன்னமும் தொடரும் உரிமை மறுப்புக்கான போராட்டங்களில் நம் தோழமைக்கு தோள் கொடுப்போம்! வென்றிடுவோம் இனவிடுதலையை!!!

நன்றி : மானமும் அறிவும்

Monday, May 30, 2011

வைரமுத்துவின் ஆயிரம் தான் கவி சொன்னேன்

ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????

Monday, May 9, 2011

Neeya Naana 08-05-11-Vijay TV Show

Watch Vijay TV Neeya Naana, Elavasam Vendum Vs Elavasam Vendam

Part 1



Part 2



Part 3



Part 4

Sunday, April 3, 2011

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி



சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின் கல்லடி, சொல்லடி, செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயமரியாதையாக வாழ்ந்தவர்.


இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், வாலடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆறு ஆண்டுகள் ராணுவ பணி செய்தார். ராணுவப் பணியின் போது மெசபடோமியாவில் இவர் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்களை கடும்; பனிகாரணமாக இங்கிலாந்து படை விட்டு விட்டு திரும்பிவிட்டது. கவலைப்படாமல் கடல்வழியாக கொல்கத்தா வந்து சேர்ந்து அத்துடன் ராணுவ பணிக்கு முழுக்கு போட்டார். ஊர் திரும்பியவருக்கு பட்டுக்கோட்டை சுயமரியாதை பயணவழிகள் செய்து கொடுத்துது.

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். அந்த சமயம் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்கள், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.

பிராமணரல்லாத மாணவர் பிராமணர்களுக்கான பானைத் தண்ணீரை குடித்து விட அந்த மாணவரை அடித்து தண்டித்தது குருகுலம். அப்படிப்பட்ட குருகுலத்துக்கு அன்றைய காங்கிரஸ் ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்தது. குருகுலத்தின் தீண்டாமை போக்கை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பெரியாரும், சீர்த்திருத்த கருத்து கொண்ட காங்கிரஸில்; பலரும் கொதித்தெழுந்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு நாளிதழில் காரசாரமாக எழுதி பிராமணர்களின் போக்கை கண்டித்தார்.


ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.


அந்த வழக்கு நீதிமன்றம் போனது. ஆதில் அழகிரிக்காக வழக்கறிஞராக ம.சிங்காரவேலர் ஆஜரானார்.


ஆழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.


இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் அழகிரிக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ரீஜினல் லெக்சரர் பதவி கிடைத்தது. பசுமலையில் தங்கி போர் ஆதரவு பிரச்சாரக் கூட்டங்களில் போர் பற்றி பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார்.

ஏதிரானவர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினார்கள். கவர்னர் விசாரனை வந்தது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்காமல் சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக புகார் வருகிறதே ? என்று கேட்க. என் பிரச்சாரத்தால் பட்டாளத்துக்கு ஆள் சேருகிறார்களா என்று மட்டும் பாருங்கள். பேச்சை பார்க்காதீர்கள் என்றார் அழகிரி. உங்களை எச்சரித்து அனுப்புகிறேன் என்றார் கவர்னர். நான் தவறு செய்யவில்லை உங்கள் மன்னிப்போ. எச்சரிக்கையோ வேண்டாம். இந்த வேலையும் வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறிவிட்டார்.


சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது மாப்பிள்ளை ஊர்வலத்தில் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி வந்தது. கூடியிருந்த கூட்டம் ராஜரெத்தினம் பிள்ளையின் தோல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாசிக்கச் சொன்னது. தனியாக வந்த கனீர் குரலொன்று ராஜரெத்தினம் பிள்ளை தோல் துண்டை எடுக்காதீர்கள் என்று கேட்டது. ஓட்டுமொத்த கூட்டமும் அந்த திசை நோக்கியது அந்த குரல் அழகிரியிடமிருந்து வந்து கொண்டிருந்தது. யாரும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் அக்கரையுடன் செயல்பட்டார்.


தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைபயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். சென்னையில் பெரியார் வரவேற்று விழா நடத்தினார்.


அவர் எத்தனை சமூகப் பணி புரட்சி செய்தாலும் அவரை காசநோய் பிடித்துக் கொண்டது. திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய முதல்வர் கலைஞர்.


தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவும் பிரிந்து விட்ட காலம் அழகிரிக்கு காசநோய் அதிகமானது. சென்னையில் டாக்டர் சந்தோசம் சிகிச்சை அளித்தார். அண்ணாவுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அழகிரி இல்லை ஊருக்கு கிளம்பி விட்டதாக தகவல் தெரிந்தது. ரயிலில் ஏறியிருந்த அழகிரியை சந்தித்து ரூ.400 பணம் கொடுத்தார். நெகிழ்ந்து போன அழகிரி அண்ணாவின் கைகளை பற்றிக்கொண்டார். அதன் பிறகு அண்ணாவை எந்த கூட்டத்திற்கு அழைத்தாலும் அழகிரிபெயரில் ரூ.100 மணியார்டர் செய்து அதன் ரசீது அனுப்பினால் தான் கூட்டத்துக்கு வருவேன் என்று அறிக்கை கொடுத்துவிட்டார். அதன்படி பலரும் பணம் அனுப்பினார்கள்.


இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்த புரட்சியாளர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி காசநோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார். மரணமடைந்தாலும் அவரது பெயரும், புரட்சி புகழும் என்றும் மங்காமல் இன்றுவரை நீடித்து நிற்கிறது. இவரது கடன்களை கலைவாணர் என்.எஸ்.கே அடைத்தார்.


அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரன போது தன் சொந்த செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையை பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.


ஆழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்ப+ர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.


அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.

Saturday, July 17, 2010

களவாணி ஒரு பார்வை ( kalavani tamil movie )


தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகிலுள்ள இரு சிற்றூர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்னை. காரணம், களவுபோன சாமி சிலை. அதிலும் களவாணித்தனம் செய்து கொண்டு திரியும் அரிக்கி (விமல் ) எதிர் ஊரில் ரவுடித்தனம் செய்யும் இளங்கோ (திருமுருகன்) அடிக்கடி மோதல். இந்நிலையில் திருமுருகனின் தங்கை மகேசை (ஓவியா)காதலிக்கிறார் அரிக்கி. இந்த காதலுக்கு இளங்கோ மட்டுமின்றி, அவர்கள் ஊரே எதிர்ப்பு காட்டி நிற்கிறது. அதை மீறி தனது களவாணித்தனத்தால் காதலியை அரிக்கி கரம்பிடிப்பது, கல கல கிளைமாக்ஸ்.

தஞ்சாவூர் வட்டார வலக்கை அப்படியே பிரதிபலிப்பதுதான் கலவணியின் ஸ்பெஷல். முதல் காட்சியில் சிறுவர்களின் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இரு ஊர் சிறுவர்கள் மோதிக்கொள்ளுவது,திருவிழாவில் ரீடா ஆடல் நிகழ்ச்சி ,நெல் களவாண்டு ஐஸ் வாங்குவது, தன்னியாடிசுடு வம்புளுப்பது போன்ற பல காட்சிகள் அப்படியே கிராமபுரதுகே கொண்டுசெல்லுது .
துபாயில் அப்பா இளவரசு சம்பாதித்து பணத்தை அனுப்புகிறார். அதை அம்மா சரண்யாவை மிரட்டி விமல் வாங்குவது, தனது நண்பர் குழுவுடன் சேர்ந்து கஞ்சா கருப்பை கலாய்ப்பது, ஒரே பஸ்சில் பயணிக்கும் இரண்டு பெண்களை ஓரிடத்தில் நின்றபடியே ப்ராக்கெட் போடுவது, காதலிக்கு உதவ அவரது பள்ளி பாடத்தை தங்கையை வைத்து எழுதச் செய்வது, தங்கைக்காக அப்பா கொண்டு வந்த உடைகள், மேக்அப் பொருளை தான் வாங்கியதாக காதலியிடம் தருவது என அக்மார்க் களவாணித்தன நடிப்பில் பட்டையகிளப்புறார் விமல். ஓவியா, அப்படியே கிராமத்து பொண்ணாக வலம்வந்து மனம்கவர்கிறார் .விமல் கோஷ்டியிடம் சிக்கி, சுக்கு நூறாகும் கேரக்டரில் சிரிக்க வைக்கிறார் கஞ்சா கருப்பு. மகனின் தில்லுமுல்லு செயல்களையும் நியாயமாக்கும் பாசிட்டிவ் அம்மாவாக பளிச்சிடுகிறார் சரண்யா. இளவரசு, சூரி என அனைவருமே கச்சிதம்.

எஸ்.எஸ். குமரனின் இசையில் பாடல்கள் கிராமிய வாசம் விசுது. ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு கதையோடு கைகோர்த்துள்ளது. இயக்குனர் சற்குணத்துக்கு இது முதல் படம். யதார்த்த சினிமாவை தன் சொந்த மண்ணிலேயே எடுத்து அதை மிகப்பெரிய வெற்றிபடமாக தந்துள்ளார்.

களவாணி பாடலை கேட்க்க : http://www.youtube.com/rajeshsellaiyan லின்க்கினை க்ளிக் செய்க

Tuesday, June 8, 2010

Rajesh Sellaiyan Pathirankottai

This video is my photo's with Goa Song Yeleu Thalamuakkum... see you all..

Thursday, May 27, 2010

Electron Transport Chain Animation Overview

The majority of the energy conserved during catabolism reactions occurs near the end of the metabolic series of reactions in the electron transport chain. The electron transport or respiratory chain gets its name from the fact electrons are transported to meet up with oxygen from respiration at the end of the chain. The overall electron chain transport reaction Animation Overview lets see you this video:



Thanks to DaggerBiology